நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி.

மஸ்கெலியா விபத்தில் இளைஞன் பலி!

மஸ்கெலியா- சாமிமலை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

காட்மோர், கல்கந்தை பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய ராமசுந்தரம் என்ற இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இவர், மண் திட்டில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.