வடக்கில் மேலும் எண்மருக்குக் கொரோனா!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (17) மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 8 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 420 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வடக்கு மாகாணத்தில் 8 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.