முகக்கவசம் அணியாத மேலும் பலர் மாட்டினர்! இதுவரை 2,605 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியைத் தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 605 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.