வட மாகாணத்தில் சுகாதார துறையினருக்கு தடுப்பூசிகள்.

வட மாகாண சுகாதார பிரிவினருக்காக 11 ஆயிரம் கொவிட் தடுப்பூசிகள்!

வட மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11 ஆயிரத்து 80 கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளன என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 820 டோஸ்களும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 160 டோஸ்களும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 300 டோஸ்களும் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்களும் மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரத்து 800 டோஸ்களும் கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் கோரப்பட்டன.

அதன் முழுமையான தொகை டோஸ்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கும் கோரப்பட்டன. எனினும் அது தனியான திட்டத்தின் ஊடாக வழங்கப்படுமென சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா செனெகா கோவிஷெல்ட் (Astra Zeneca COVISHELD) கொவிட்-19 தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்கள் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

அந்த தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று மேல் மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.