வீட்டு கூரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு. ஒருவர் கைது.

கிளிநொச்சி விவேகானந்தா நகர் வீட்டு கூரையில் காத்திருந்த அதிர்ச்சி ஒருவர் கைது.

கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியில் வீட்டுக் கூரை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கிலோ 456 கிராம் கஞ்சாவை கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் மது ஒழிப்பு பிரிவினாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் மது ஒழிப்புப் பிரிவினாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டு கஞ்சா மீட்கப்பட்டதுடன் வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.