யாழில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் புறக்கணிப்பு.

இலங்கை போக்குவரத்து சபை
ஊழியர்கள் யாழ் மாவட்டத்தில் திடீரென இன்று அதிகாலை முதல்
பணிப்புறக்கணிப்பில் குதித்துள்ளனர்.

இதனால் பயணிகள் போக்குவரத்து வசதியின்றி அந்தரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின்
வடபிராந்திய பிரதான முகாமையாளராக
நியமிக்கப்பட்ட செல்லத்துரை
குலபாலச்செல்வனின் நியமனத்தை
இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
இன்றைய தினம் வடக்கு மாகாணம் முழுவதும் இ.போ.ச தொழிற்சங்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

மேலும் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த செல்லத்துரை குணபாலச்செல்வம், இலங்கை போக்குவரத்துச் சபையில் நீண்ட கால சேவை புரியும் அனுபவமிக்கவர் எனவும் கடந்த ஆட்சியில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையால் அவர் யாழ்ப்பாணம் சாலை முகாமையாளர் பதவியிலிருந்து
கொழும்புக்கு மாற்றப்பட்டாரெனவும்
மும்மொழித் திறமையுடைய அவர், கடந்த காலங்களில் பல ஊழியர்களின்
பதவிநிலை பிரச்சினைகளை சீர் செய்து
வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.