கிளிநொச்சியில் பாரிய விபத்து. மயிரிழையில் உயிர் தப்பினார்கள்.

கிளிநொச்சி நகரில் பாரிய விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட A9 வீதியில் காவல்துறை நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.குறித்த விபத்தில் 3 வாகனங்கள் தொடர்புபட்ட போதிலும் தெய்வாதீனமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஏ 9 வீதி ஊடாக பயணித்த உழவு இயந்திரம் மாவட்ட செயலக வீதி நோக்கி திரும்ப முட்பட்ட வேளை, பரந்தன் நோக்கி பயணித்த சொகுசு வேன் அதனுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்து யாழிலிருந்து தென்னிலங்கை நோக்கி பயணித்த எரிபொருள் கொள்கலன் வாகனத்தில் மோதியது.

இதன்போது வான் பாரிய சேதங்களிற்குள்ளானதுடன் எரிபொருள் கொள்கலன் வாகனமும் பகுதியளவில் சேதமடைந்தது. எரிபொருள் நிரப்பிய வாகனம் பாரிய தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிந்தது. இதேவேளை குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.