யாழ். மாவட்டத்தை முழுமையாக முடக்க சகலரும் ஓரணியில் அணிதிரளுங்கள்! இரா.சாணக்கியன்.

யாழ். மாவட்டத்தை முழுமையாக முடக்க
சகலரும் ஓரணியில் அணிதிரளுங்கள்!

மன்னாரில் சாணக்கியன் எம்.பி. பகிரங்க அழைப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை முழுமையாக முடக்க அனைவரும் ஓரணியில் அணிதிரள வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் நுழைந்து மத்திய பஸ் நிலையத்தை இன்று பிற்பகல் சென்றடைந்தது.

இதன்போது அங்கு கருத்து வெளியிடும்போதே சாணக்கியன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.