‘மகளுக்கு பதிலா நீ வா’, வீடியோ கால், ஆபாச கொடுமை..! செல்போனால் விபரீதம்

நாமக்கல் அருகே சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை தாய்க்கு அனுப்பி மிரட்டிய வாலிபர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கணவனை இழந்து மகன் மற்றும் மகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் மகள் பள்ளியில் படித்து வருவதால் ஆன்லைன் வகுப்பிற்காக புதிய ஆண்டிராய்டு போனை வாங்கி கொடுத்துள்ளனர். தாயும், அண்ணனும் வேலைக்கு சென்று விடுவதால் வீட்டில் தனியாக இருக்கும் சிறுமி ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் நேரங்களை தவிர பிற நேரங்களில் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தாய் வாட்சப் எண்ணிற்கு ஆபாச வாய்ஸ் மெசேஜும், சிறுமியின் அந்தரங்க புகைப்படமும் வந்துள்ளது. அதை கண்டு அதிர்ந்துபோன பெண், உடனே மகளிடம் அதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, கதறி அழுத சிறுமி தாயிடம் கூறிய விஷயம் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதாவது, இன்ஸ்டாகிராம் மூலம் விருதுநகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் சிறுமிக்கு அறிமுகமாகியுள்ளான்.

ஆரம்பத்தில் அண்ணனை போல பழகி வந்த தமிழ்ச்செல்வன், சிறுமியை காதலிப்பதாக கூறி மனசை கெடுத்துள்ளார். பின்னர் இருவரும் காதலர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் சிறுமிக்கு வீடியோ கால் செய்த தமிழ்ச்செல்வன், ” உன்னை நிர்வாணமாக பார்க்க ஆசையாக உள்ளது என்று கூறி சிறுமியிடம் வற்புறுத்தியுள்ளான். ஆர்வக்கோளாறில் இருந்த சிறுமியும் எதை பற்றியும் சிந்திக்காமல் தமிழ்ச்செல்வன் சொன்னபடி வீடியோ காலில் தனிப்பட்ட முறையில் இருந்துள்ளார்.

அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொண்ட தமிழ்ச்செல்வன், தன்னை போல யாருக்கு வேண்டுமானாலும் ஆபாசமாக வீடியோ கால் செய்வாயா என்று கேட்டு சண்டையிட்டுள்ளான். மேலும், உன்னுடைய புகைப்படங்களை என் நண்பர்களும், உன் தாயும் பார்க்கட்டும் என்று கூறி சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை தாய்க்கும் அனுப்பியது தெரிய வந்தது. மேலும், சிறுமியின் தாய்க்கு அனுப்பப்பட்ட வாய்ஸ் மெசேஜில், ” உன்னுடைய மகளின் புகைப்படங்களை யாருக்கும் அனுப்பக்கூடாதென்றால் நீயும் வீடியோ காலில் நிர்வாணமாக இருக்க வேண்டும் என கூறி மிரட்டியுள்ளான். இதனால் பதறிப்போன சிறுமியின் தாய் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், அங்கு போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யாமல், சிறுமியின் குடும்பத்தை உதாசினப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் வேதனை அடைந்த சிறுமியின் தாயும், அண்ணனும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷை சந்தித்து அழுதபடி சம்பவத்தை எடுத்து கூறியுள்ளனர். அப்போது, சிறுமியின் இன்ஸ்டாகிராம் உரையாடல்களை ஆய்வு செய்தவர், உடனே தனிப்படை அமைத்து விருதுநகரில் இருந்த தமிழ்செல்வனை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அங்கும் உரிய வழக்கு பதிவு செய்யாமல், சிறுமியின் குடும்பத்தை தகாத வார்த்தைகளால் போலீசார் திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், வழக்கு பதிவு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, எங்களை விட்டுவிடுங்கள் என்று சிறுமியின் தாய் கெஞ்சிய நிலையில், காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிய படுத்தியுள்ளார். உடனே சம்மந்தபட்ட காவல் நிலையத்துக்கு போன் செய்த காவல் கண்காணிப்பாளர் கண்டித்ததுடன், மாவட்ட ஏ.டி.எஸ்.பியை நேராக ஸ்டேஷனுக்கே அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழ்ச்செல்வன் மீது போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவிகள் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், அவரச காரணங்களுக்காகவும் பெற்றோர் செல்போனை வாங்கி தருவது தவறில்லை. ஆனால், பள்ளி பருவம் முடியும் வரையிலாவது தினமும் அவர்களது செல்போன் நடவடிக்கைகளை தெரிந்துகொள்வது அவசியம். ஆன்லைன் வகுப்பு மற்றும் பாட சம்மந்தமான செயலிகள் தவிர தேவையற்ற சமூக செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி வருவதும், சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை செய்தித்தாள் மூலம் குடும்பத்துடன் அமர்ந்து படித்து வருவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

Leave A Reply

Your email address will not be published.