தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலுக்கு இறுதி மரியாதை…

கொழும்பு, டாம் வீதியில் யுவதியை கொலை செய்து பயணப் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டாமென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் அதிகாரியின் உடலுக்கு பொலிஸ் சீருடையை அணிய வேண்டாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் வழக்கொன்றில் சந்தேக நபராக காணப்படும் பொலிஸ் அதிகாரியொருவர் இறந்துவிட்டால் அல்லது தற்கொலை செய்து கொண்டால் பொலிஸ் சீருடை அணிவிக்கப்பட்டு இறுதி சடங்கின் போது பொலிஸாரால் கௌரவிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.