பாலிகா மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பிரதான முன்வாயில் கதவு திறப்பு விழா.

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் 1.5 மில்லியன் ரூபா செலவில் அக்குறணை முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பிரதான முன்வாயில் கதவு திறப்பு விழா பாடசாலை அதிபர் சுஹீரா சித்தீக் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இப்பாடசாலையில் ஒரு தசாப்த காலமாக அதிபராக கடமையாற்றிய ரிஹானா செயின் கலந்து கொண்டு முன்வாயில் கதவினை திறந்து மாணவிகளின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதில் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் எம். ஏ. எச். எம். சவ்ராஜ், பிரதி அதிபர் ஏ. ஆர். ஹம்சா பழைய மாணவ சங்க செயலாளர் எம். ஐ. எப். சியானா இஸமாயீல் பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் எஸ். ஏ. எம். பைரோஸ் உள்ளிட்ட ஆசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.