யாழ்ப்பாணத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

யாழ்ப்பாணத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 8 பேர்.

திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி கடைகளின் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் நேரடித் தொடர்புடைய மூவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, பருத்தித்துறை வைத்தியசாலைகளின் தனிமைப்படுத்தல் விடுதிகளில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.