கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு யோசனை!

“மாகாண சபைத் தேர்தலை தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்துவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது.”

இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதன்படி மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக கட்சித் தலைவர்களைக் கூட்டி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தற்காலத்தில் தேர்தல் ஒன்று நடக்குமானால் அரசு தோல்வியடைவது நிச்சயம் என ஆனந்த தேரர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.