தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் மீள ஏற்றுமதிக்கு கப்பலில் ஏற்றப்படுகின்றன.

இறக்குமதிசெய்த தேங்காய் எண்ணெய் மீள ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கட்டானா சுத்திகரிப்பு நிலையத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 105 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் மீள ஏற்றுமதிக்கு கப்பலில் ஏற்றப்படுகின்றன. 06 கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய இன்று திங்கள்கிழமை காலை முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை சுங்க துணை இயக்குநர் தெரிவித்தார்.

கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டிருந்த “பார்பரா” கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தின் SAGT Terminal முனையத்திற்கு வந்தது .

பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்தே இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.