சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – வடக்கு மாகாண ஆளுநர் எச்சரிக்கை.

சுகாதார வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நேற்றைய அறிக்கையின்படி கொரோனா பரவல் வடக்கில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரச அதிபர்களூடாக மீளாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளும் அவற்றை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.