இலங்கையில் கடந்த 9 மணி நேரங்களில் கொரோனாச் சாவு 25 என அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அதிகாலை ஒரு மணியளவில் அறிவித்துள்ளது.

இதனால் இதுவரையில் கொரோனாத் தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (05-05-2021) பிற்பகல் 4 மணியளவில் கொரோனாவால் 11 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கடந்த 9 மணி நேரத்தில் அறிவிப்பாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.