மறைந்த கேரளத்து இரும்பு பெண் கே.ஆர். கௌரி அம்மா : ஜோ

கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் ஜனாதிபத்திய சம்ரக்ஷன சமிதியின் நிறுவனத் தலைவருமான கே.ஆர். கௌரி அம்மா (வயது 101) இன்று (11) காலமானார்.

கௌரி அம்மா வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சில வாரங்களுக்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு கௌரி அம்மா உயிரிழந்தார்.

கே. ஆர். கவுரி அம்மா கேரளாவின் வலிமையான அரசியல் தலைவர்களில் ஒருவர். மூத்த பெண் அரசியல்வாதி . ஒரு நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையை வாழ்ந்தவர்.

கே. ஆர். கவுரி அம்மா ,ஒரு புரட்சியாளர், வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் இராஜதந்திரி. கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து 1984 ல் நாயனாரால் வெளியேற்றப்பட்ட போது ஜனநாயக சமர சமிதி (ஜே.எஸ்.எஸ்) க்கு அவர் தலைமை தாங்கினார்.

பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூகத்திலிருந்து வந்த முதல் பெண் சட்ட ம் பயன்றவர் ஆவார். அவர் 1957, 1967, 1980 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் கேரளாவில் கம்யூனிஸ்ட் தலைமையிலான அமைச்சகங்களில் அமைச்சராக இருந்தார்.  2001 முதல் 2006 வரை காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சராகவும் இருந்தார். கேரள சட்டப்பேரவையில் நீண்ட காலம் பணியாற்றிய எம்.எல்.ஏ ஆவார்.

கே. ஆர். கவுரி அம்மா ; கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்த்தலாவின் பட்டனக்காடு கிராமத்தில், கலத்தில்பரம்பில் ராமன் மற்றும் பார்வதியம்மா ஆகியோரின் ஏழாவது மகளாக, வளர்ந்தார். தனது தந்தை நிறுவிய பள்ளீயில் முதலாம் படிப்பை துவங்கியவர். பிற்பாடு சேர்தலா பாடசாலையிலும் எர்ணாகுளம் மகாராஜா மற்றும் புனித தெரசா கல்லூரியில் தனது கல்லூரிக் கல்வி படிப்பை முடித்தார். பின்பு திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்று வழக்கறிஞராக பணியாற்றி வருகையில் தான் தன் சகோதரன் ஒளிவில் இருந்ததால் நேரடி அரசியல் கள்த்தில் வரவேண்டிய நிர்பந்தம் உருவானது.

நல்ல செல்வச் செழிப்பான நில உடமையாளரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த கலத்தில்பரம்பில் ராமனின் மகளாக பிறந்த கே. ஆர். கவுரி அம்மாவிற்கு அவரது தந்தை வாழ்நாள் முழுவதும் உத்வேகம் அளித்து வந்துள்ளார்.

இவருடைய மூத்த சகோதரரும் தொழிற்சங்கத் தலைவருமான கே. ஆர். சுகுமாரனின் தாக்கத்தில் தான் , பெண்கள் அரசியலில் நுழைய தயங்கும் காலகட்டத்தில் அரசியலுக்குள் நுழையும் சூழல் உருவானது. கொள்கைப்பிடிப்பும், கல்வி அறிவும் சேர்ந்த கே. ஆர். கவுரி அம்மா தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் இயக்கங்கள் மூலம் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

1952 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் திருவாங்கூர் சட்டமன்றத்தின் கவுன்சிலுக்கு அவர் அமர்ந்த எம்.எல்.ஏ. பி.கே.ராமனுக்கு எதிராக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் (ஈ.எம்.எஸ்) தலைமையில் 1957 இல் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சகத்தில் வருவாய் , கலால் மற்றும் தேவஸ்வம் அமைச்சராக பணியாற்றினார்.

அதே வருடம் அதே கட்சியில் முக்கிய அரசியல்வாதியும் அமைச்சருமான டி.வி.தாமஸை மணந்தார். 1964 இல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரிந்த போது, கே. ஆர். க வுரி அம்மா புதிதாக அமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் பிரிவில் சேர்ந்தார். ஆனால் அவரது கணவர் டி. வி. தாமஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நின்றார். இது அவர்களின் உறவில் பிளவுகளை உருவாக்கியது, விரைவில் அரசியல் கருத்துக்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

நில சீர்திருத்தங்கள்
கேரளாவில் நில சீர்திருத்தங்கள் கவுரி அம்மாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் புரட்சிகர நில சீர்திருத்த மசோதாவை இயக்கியவர் இவர்தான். இந்த மசோதா நிலத்தின் உரிமையை பங்குதாரர்கள் உட்பட குத்தகைதாரர்களுக்கு வழங்கவும், நில உரிமையாளர் வைத்திருக்கக்கூடிய நிலத்திற்கு உச்சவரம்பை நிர்ணயிக்கவும் செய்தது.

நில உரிமையாளர்களிடமிருந்து எடுக்கப்பட்ட உபரி நிலத்தை நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்நிலையில் கே. ஆர். கவுரி அம்மா தங்கள் குடும்ப சொத்தன 103 ஏக்கர் நிலத்தை அரசிற்கு கொடுத்தார்.

1967 தேர்தல்களில் முதலமைச்சர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அமைச்சில் விற்பனை வரி, சிவில் சப்ளைஸ், சமூக நலன் மற்றும் சட்டம் அமைச்சராக பணியாற்றினார். முந்தைய அரசாங்கம் நிறைவேற்றிய நில சீர்திருத்த மசோதாவில் பல முற்போக்கான மற்றும் தீவிரமான திருத்தங்களை அவர் மேற்கொண்டார். இது நடைமுறைப்படுத்தப்பட்டபோது, கேரளாவில் நில உரிமையாளர் ஒழிக்கப்பட்டனர். 3.5 மில்லியன் குத்தகைதாரர்கள் மற்றும் சுமார் 500,000 குடிகிடப்புக்கர் ஆகியோர் தங்கள் நிலத்தின் உரிமையாளர்களாக ஆக்கப்பட்டனர். ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டு கிராமப்புறங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

ஈ.கே.நயனார் அமைச்சில் அமைச்சர்
1980 ஜனவரி 25 முதல் அக்டோபர் 20 வரை 1981 கே.ஆர். க E ரி அம்மா முதல் ஈ. கே. நாயனார் அமைச்சில் வேளாண்மை, சமூக நலன், கைத்தொழில், விழிப்புணர்வு மற்றும் நீதி அமைச்சரின் நிர்வாக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1987 தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளராகக் பிரசாரம் செய்யபட்ட கே. ஆர். கவுரி அம்மா , இரண்டாவது ஈ.கே.நாயனார் அமைச்சு அமைக்கப்பட்டபோது ஓரங்கட்டப்பட்டு பின்னர் 1994 ல் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்பு பரம எதிரிகளான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் சேர்ந்தார். ஏ. கே. ஆண்டனி அமைச்சில் (17 மே 2001 – 29 ஆகஸ்ட் 2004) விவசாய அமைச்சராக பணியாற்றினார். பிற்பாடு உம்மன் சாண்டி அமைச்சில் கவுரி அம்மா விவசாய, மண் பாதுகாப்பு, மண் ஆய்வு, கிடங்கு கார்ப்பரேஷன், டைரி அமைச்சராக பணியாற்றினார். உம்மன் சாண்டி அமைச்சில் (31 ஆகஸ்ட் 2004 – 12 மே 2006) வளர்ச்சி, பால் கூட்டுறவு, வேளாண் பல்கலைக்கழகம், கால்நடை பராமரிப்பு மற்றும் கயிர்அமைச்சராகவும் பணியாற்றினார்.

கே.ஆர். கவுரி அம்மா கேரள அதிபர் கர்ஷக சங்கம், கேரள மகிளா சங்கம்போன்ற சமூக மற்றும் அரசியல் இயக்கங்களுடன் செயலாற்றியுள்ளார்.

2011 ல் தனது சுயசரிதை ’ஆத்மகதா’ என்ற புத்தகத்திற்கு கேரள சாகித்ய அகாடமி விருதும் வென்றார்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை தேவையற்ற ஆய்வு மற்றும் கடுமையான விமர்சனங்களுக்காக வந்தது, குறிப்பாக தாமஸுடனான அவரது திருமணம் மிகப் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.
1987ல் கட்சியில் நிலவிய ஆணாதிக்க மனப்பான்மை தேர்தலைத் தொடர்ந்து அவரை ஓரங்கட்டியது.

“உண்மையில், அவரது தொழில் பாதை கேரளாவில் பெண்களின் அதிகாரமளித்தல் மறுமலர்ச்சியின் ஏற்றம் மற்றும் வம்சாவளியை அடுத்த “துரோகம்”, 1994 இல் வந்தது. கவுரி அம்மா “கட்சி எதிர்ப்பில்” ஈடுபடுகிறார் என குற்றம் சாட்டி சிபிஐ (எம்) இலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைதொடர்ந்து ஜனநாயக சம்ரக்ஷனா சமிதி (ஜே.எஸ்.எஸ்) என்ற கட்சி மூலம் அரசியலில் தீவிரமாக இருந்தார்.

பின்பு மார்கிஸ்டு கட்சிக்குள் திரும்ப போனாலும் அவருக்கான் மரியாதை கிடைக்கவில்லை, நம்பூதிரிப்பாடு நாயனார் போன்ற தலைமைகளின் காட்புணர்ச்சிக்கு இடம் கொடுக்காது வாழ்ந்தவர். தனது 102 வது வயதில் காலம் சென்றுள்ளார்.

கட்சி பேதமின்றி அனைத்து கட்சி மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றவர். இதுவரை கவுரி அம்மாவை போன்ற ஆளுமையான ஒரு பெண் அரசியல்வாதி கேரளா அரசியலுக்கு இன்னும் வரவில்லை.

ஜோ

Leave A Reply

Your email address will not be published.