இலங்கையில் மேலும் 42 பேர் சாவு! – கொரோனா காவு 1,405 ஆக உயர்வு.

இலங்கையில் மேலும் 42 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,405 ஆக அதிகரித்துள்ளது.

இம் மாதம் 14ஆம் திகதி முதல் நேற்று (29) வரையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் 36 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய 14ஆம் திகதி ஒருவரும், 19ஆம் திகதி இருவரும், 20ஆம் திகதி ஒருவரும், 21ஆம் திகதி இருவரும், 22ஆம் திகதி இருவரும், 23ஆம் திகதி மூவரும், 25ஆம் திகதி மூவரும், 26ஆம் திகதி இருவரும், 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தலா 10 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.