மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக இந்தியாவிடமிருந்து 600 மில்லியன் ரூபா நன்கொடை!

மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 600 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக நேற்று 7ஆம் திகதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சுகாதார அதிகாரிகள் , வடமாகாண ஆளுநர் ஊடாக இவ்வருடம் பெப்ரவரி மாதம் விடுத்த வேண்டுகோளுக்கு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணங்கி, இந்த நன்கொடையை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் அவசர சிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கும் இந்த பணத்தை பயன்படுத்த மன்னார் சுகாதார அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.