வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் யாழ் வைத்தியசாலையின் சொத்துக்களை அடித்து நொறுக்கினர்!

யாழ் வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் இருபத்தைந்து பேர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையின் பொருட்களுக்கு பலத்த சேதத்தை செய்துவிட்டு நேற்று (7) தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்களின் தவறினால் தமது நண்பர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தரது நண்பர்கள் ஆவேசமாக அலறியடித்துக்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர்களின் தாக்குதலால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மூன்று இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு தாக்குதலுக்கு உள்ளான இரண்டு வைத்தியசாலை ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.