எமிரேட்ஸ் விமான சேவையானது இலங்கைக்கு விடுத்துள்ள தடை.

எமிரேட்ஸ் விமான சேவையானது இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய பயணிகளுக்கு. விடுக்கப்பட்டிருந்தந்த தடைய எதிர்வரும் ஜூலை 15 வரை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ,கடந்த 14 நாட்களில் இந்த நாடுகள் வழியாக இணைந்த பயணிகள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிக்க ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் , ஐக்கிய அரபு இராச்சிய நாட்டினர், ஐக்கிய அரபு இராச்சிய கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொரோனா நெறிமுறைகளுக்கு இணங்கும் இராஜதந்திர பணிகளின் உறுப்பினர்கள் பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.