இராணுவத்துக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளே வன்னி மக்களுக்கு ஏற்றப்படுகின்றன!

“வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அவர்களுக்கு நேரடியாகக் கிடைக்கப்பெற்ற கொரோனாத் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.”

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தேற்றல் திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக, நான் குறிப்பிட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மை நிலையைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இரண்டாவது கட்டமாக தடுப்பூசிகள் வழங்குவதற்கு கடந்த 3ஆம் திகதி 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் மாவட்ட சுகாதாரத் திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இரண்டாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களால் இராணுவ மருத்துவக் குழுக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தின்கீழ் நேற்றுமுன்தினம் 5ஆம் திகதி முதல்நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 462 பேருக்கும், நேற்று 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9 ஆயிரத்து 453 பேருக்குமாக முதல் இரண்டு நாள்களில் 18 ஆயிரத்து 915 பேருக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அம்மாவட்ட சுகாதார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றன. இதற்கான தடுப்பூசிகள் இராணுவத்தினருக்கே நேரடியாக வழங்கப்பட்டுள்ள” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.