ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைவதற்கான தடை நீடிப்பு.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைவதற்கான தடை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ,இவ்வறிவித்தல் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் தமக்கு விடுக்கப்பட்டுள்ளதாக டுபாயை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் ,எமிரேட்ஸ், அமீரக கோல்டன் வீஸா வைத்திருப்போருக்கும் இராஜ தந்திரிகளுக்கும் அமீரகத்துக்குள் நுழையத் தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.