சிறுமி மரணம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்க!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் குழுவினர் இதனை வலியுறுத்தியுள்ளனர்.

சிறுமி பணிபுரிந்த வீட்டில் அவருக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் வன்புணர்வு கொடுமைகள் மற்றும் அவருக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அழுத்தங்கள் மற்றும் இந்தச் சம்பவத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் உதயகுமார் மற்றும் எம், வேலுகுமார் ஆகியோரே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த சிறுமியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை தமிழ் முற்போக்குக் கூட்டணி அழுத்தங்களைப் பிரயோகிக்கும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.