இந்திய வீரரான க்ருனால் பண்டியாவிற்கும் கொரோனா தொற்று.போட்டி ஒத்திவைப்பு.

குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த இரண்டாவது டி20 போட்டி நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இன்று 27ஆம் தேதி நடைபெற இருந்த 2வது டி20 போட்டி ஆனது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் ஒத்திவைக்கப்பட காரணம் யாதெனில் இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக க்ருனால் பாண்டியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டியில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த தொடர் துவங்க இருந்த போது இங்கிலாந்து சென்று திரும்பிய இலங்கை அணியின் வீரர்கள் சிலருக்கும் பயிற்சியாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது இந்திய வீரரான க்ருனால் பண்டியாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் ஒருமுறை இந்தத் தொடரில் திகதிகள் மாற்றமடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.