வெள்ளவத்தையில் வெளிநாட்டுப் பெண் தூக்கிட்டு தற்கொலை.

கொழும்பு 06, வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பில் வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று நண்பகல் குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சம்பவம் குறித்து தொடர்ச்சியான விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.