கரைச்சி பிரதேச சபை தவிசாளரை விசாரணைக்கு அழைத்தது ரி.ஐ.டி.

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை எதிர்வரும் 06 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு கிளிநொச்சிப் பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு நான்காம் மாடியிலும், கிளிநொச்சியிலும் அமைந்துள்ள பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்து நீண்டநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சபையின் தவிசாளருக்கும் விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.