ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது.

கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பாவா லேனைச் சேர்ந்தவர்கள் னவும் பொலிஸார் தெரிவித்தனர்

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யு.ஏ.துமிந்த நயனசிறியின் தலைமையில் பொலிஸ் அதிகாரிகளான நியாஸ்தீன், அமித்த, அஜித் மற்றும் அருன் ஆகியோர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடடிவக்கையின்போது இவர்கள் ஹெரோயின் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 160 மில்லி கிராம், 130 மில்லி கிராம், 110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலும் ஆலோசனையின் பேரிலும் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.