கல்கிஸை சிறுமி விவகாரம்: இதுவரை 45 பேர் சிக்கினர்!

கல்கிஸைப் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சிறுமியை இணையத்தளத்தில் விற்பனைக்காக விளம்பரத்திய நான்கு இணையத்தளங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று இலங்கைப் பொலிஸாரினூடாக கணினி விசேட நிபுணர்களை நியமித்து, இணைத்தளங்களில் பதிவேற்றப்படும் சிறுவர் பாலியல் விடயங்கள் தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.