கிராம சேவகர்கள் 6 பேருக்குக் கொரோனா!

கம்பஹா மாவட்டம், நிட்டம்புவ பிரதேசத்தில் கிராம சேவகர்கள் 6 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது என அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

கரஸ்னாகல, ரத்பொகுனகம, கத்தொட்ட மற்றும் தீனா பமுனுவ கிழக்கு பகுதி ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் கிராம சேவகர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.