பதுளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக 120 பேருக்குக் கொரோனா!

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக நிர்வாகப் பிரிவில் 120 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் பாலித ராஜபக்ஷ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பதுளை பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மூவர் உள்ளிட்ட 11 வைத்தியர்கள், தாதியர்கள் 13 பேர், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் 08 பேர், ஏனைய அதிகாரிகள் 11 பேர், சிற்றூழியர்களில் சாரதி, பாதுகாவலர்கள் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று வைத்தியசாலையில் ஐந்து கொரோனா சிகிச்சை விடுதிப் பிரிவுகளில் 150 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றாளர்களில் 40 இற்கும் மேற்பட்டவர்களுக்கு ஒட்சிசனின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.