கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் மறுநாள் மரணம்.

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் ஒருவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 10 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் குணமடைந்தார் என்று கூறி நேற்றுமுன்தினம் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த வேளை நேற்று திடீரென உயிரிழந்துள்ளார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 85 வயதுடைய பெண் சாவகச்சேரி வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கும் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு வந்து சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.