ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்துவ சந்தைப் பகுதி மற்றும் வெல்லவீதிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய வீதி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 208 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து போதைப்பொருள் விற்பனையில் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம், 06 தொலைபேசிகள், இரண்டு கார்கள் என்பற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவிசாவளை, வெல்லவீதிய, பொரளை மற்றும் கொழும்பு – 12 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.