முல்லைத்தீவிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் நேற்று(22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட தாதியர் மருத்துவ சங்கத்தினர் நேற்று நண்பகல் அரைமணி நேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடாத்தியுள்ளார்கள்.

பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்க வேண்டும்; கடமைக்கு சமூகமளிக்காத இடையூறுகள் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு, அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது வைத்திய நிலையங்களில் கடமையாற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்; கொரோனா காலத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்; சுகாதார ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் சம்பள அதிகரிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.