இராணுவ பேரூந்து விபத்து. இருவர் படுகாயம்.

வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ பேருந்து பூனாவைக்கு அண்மித்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லோறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்துடன் மேலும் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

Leave A Reply

Your email address will not be published.