பருத்தித்துறை பிரதேச சபையின் ‘பட்ஜட்’ அமோக ஆதரவுடன் வெற்றி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சபையின் விசேட கூட்டம் இன்று காலை சபையின் தவிசாளர் அ.சா.அரியகுமார் தலைமையில் நடைபெற்றது.

வரவு – செலவுத் திட்டத்தை வாக்கெடுப்புக்கு விட்டபோது 16 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் (அ.சா.அரியகுமார், கு.தினேஸ், க.தவயோகநாதன், த.சந்திரதாஸ், க.சிறீகாந்தரூபன், சி.தியாகலிங்கம், ஆ.சுரேஷ்குமார், சி.பிரசாத்), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 4 உறுப்பினர்களும் (கி.ஜெயபாலன், ஞா.தர்சன், திருமதி வி.றஜீதா, திருமதி சி.கவிதா), தமிழர் விடுதலைக் கூட்டணியின் 2 உறுப்பினர்களும் (வே.பிரசாந்தன், எட்வேட் எட்வின்), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் (கா.அரசரட்னம்), ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஓர் உறுப்பினரும் (பொ.பிரேமதாஸ்) வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஈ .பி.டி.பியின் சார்பில் கலந்துகொண்ட ஒரேயோரு உறுப்பினர் (செ.செபஸ்தியன்) மாத்திரம் எதிராக வாக்களித்தார்.

21 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் வரவு – செலவுத் திட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கின.

எஞ்சிய ஈ.பி.டி.பியின் 2 உறுப்பினர்களும் (செல்வி. த.சாந்தாதேவி, திருமதி. ப.கலாவதி), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் (நா.பாலரமேஸ்), ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு உறுப்பினரும் (இ.நாகேந்திரராசா) கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

Leave A Reply

Your email address will not be published.