விபச்சார விடுதி நள்ளிரவு முற்றுகை! – இருவர் கைது.

கம்பஹா, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு நகரில், ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி நேற்று நள்ளிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விபச்சார விடுதியை நடத்தி வந்த நபரும் விபச்சார விடுதியை நடத்துவதற்கு உடந்தையாக இருந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு, கம்பஹா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 41, 37 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில, நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.