யாழில் ‘தண்ணிப் பார்டி’யில் சிங்கள மாணவர்கள் மோதல்! – ஐவர் வைத்தியசாலையில் சேர்ப்பு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ். பால்பண்ணை பகுதியிலுள்ள விடுதியில் மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ‘தண்ணிப் பார்டி’யில் கலந்துகொண்டவேளை, ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.