முடமாவடி சந்தியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்பு.

யாழ்.நல்லுார் – முடமாவடி சந்தியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்ட நிலையில் அங்கு பரப்ரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.