இலங்கை கடற்படையால் மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது: விடுவிக்கக் கோரி காலவரையற்ற போராட்டம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேலும் 14 பேரை கைது செய்துள்ளது, மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் மண்படம் பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் 3 ஆயிரத்திற்கும் அதிமான மீனவர்கள் கடந்த சனிக்கிழமை கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்ததோடு 55 பேரையும் சிறைபிடித்து சென்றனர். அதோடு பல லட்ச ரூபாய் மதிப்பிலான எட்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதை கண்டித்து ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேரும், மன்னார் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 3ஆம் தேதி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டதால், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளது. இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் எழுவை தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களையும் அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை படகுடன் கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். ஏற்கனவே ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த 8 விசைப்படகுகளும் 55 மீனவர்களும் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப் பட்டது
இந்நிலையில், 55 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் புதன்கிழமை முதல் தங்கச்சிமடம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனிடையே, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டம் எழுவைத்தீவு பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 2 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துள்ளனர்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களை விடுதலை செய்யக் கோரி போராடி வரும் நிலையில், இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.