லண்டன் தமிழ் பெண்ணை கொலை செய்து , முதலைக்கு போட்டவர் கைது

கிளிநொச்சி, உதயநகர், அம்பாள்குளம் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தாயை கொன்று முதலைகள் அடங்கிய கால்வாயில் சடலத்தை வீசிய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த தாய் இங்கிலாந்தின் லண்டனில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அம்பாள்குளத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான இராசேந்திரம் இராஜலக்ஷ்மி உதயநகர் அம்பாள்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.நேற்று இரவு முதல் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

பின்னர் தாய் தங்கியிருந்த வீட்டின் தரையில் பல இரத்தக் கறைகளைக் கண்டறிந்த பொலிஸார், குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், பெண்ணைக் கொலை செய்த பின் மோட்டார் சைக்கிளில் வைத்து  சடலத்தை வீசுவதற்காக வீட்டில் இருந்து 18 கிலோமீற்றர் தொலைவில் முதலைகள் அதிகம் உள்ள கந்தபுரத்தில் உள்ள கால்வாயில் வீசியமை தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில், பொலிஸார் கால்வாக்கு சென்று பார்த்தபோது, ​​குறித்த பெண்ணின் சடலம்  உர  மூட்டையில் கட்டி வீசிய நிலையில் மிதப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சடலத்தை வீச இன்னொருவரது உதவியை பெற்றிருக்கலாமோ என சந்தேகிப்படும் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.