பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தாமரை குறித்து கமல்ஹாசன் எமோஷனலாக பேசியவை …..

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தாமரை குறித்து நடிகர் கமல்ஹாசன், “பிக்பாஸ் வீட்டுக்குள் நீங்க வந்தபோது, இந்த பொண்ணு எங்கப்பா ரொம்ப நாள் இருக்கப் போக்துனு நிறைய பேர் நினைச்சாங்க.. ஆன அவங்களுக்கெல்லாம் உங்கள் இருப்பு பெரிய ஆச்சரியத்தை அடுத்தடுத்து தந்தது. நீங்களும் என நடந்தாலும் உங்களை இழக்காமல் நீங்கள் நீங்களாகவே இருந்தீங்க.” என்று பேசினார்.

அத்துடன், “ஒரு புலி, ஒரு முறம் கொடுனு கேட்காமலேயே நீங்கள் தமிழ்ப் பெண்ணாக இருந்தீர்கள். ஆக்சுவலி நான் உங்களை அடுத்த வாரம்தான் பார்க்கணும்னு நெனைச்சேன். ஆனால் ஏன்னு தெரியல, சிலர் அவ்வாறு நினைக்கவில்லை. பரவாயில்லை, இதுவரை உங்களை இங்கு இருக்க வைத்தவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்வீர்கள் என எனக்கு தெரியும்!” என்றும் கமல் தெரிவித்தார்.

மேலும் பேசியவர், “சொல்லப்போனால் 10 படம் நடிச்சவங்களுக்கு கிடைச்ச வெற்றி உங்களுக்கு இந்த பிக்பாஸ் மூலமாக கிடைத்துள்ளது. ஆனால் நீங்கள் இப்போது வெளியே செல்வது எனக்கே ஏமாற்றம் தான். என் ஏமாற்றத்துல நான் கொந்தளிக்கிறேன், மற்றவர்கள் தாமதமாக சாரி கேப்பாங்க இல்ல, மன்னிப்பு கேப்பாங்க. ஆனால் நீங்க இந்த வெற்றியை போதும்னு நினைக்காதீங்க.” என்று கூறியது இன்னும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக, “உங்களுக்கு தாமரை ஆர்மி இல்ல, சோஷியல் மீடியாவில் நீங்கள் பிரபலம் இல்லை, ஆனால் தாமரை என்கிற ஒரு பெண் பிக்பாஸில் இருக்கிறார் என்று சொல்லி தமரைக்காக போன் வங்கியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இதேபோல், அந்த பணப்பெட்டி வந்தாப்புறம், இதுக்கு மேல நான் சம்பாதிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்குனு சொன்னீங்களே. அந்த நம்பிக்கை என்கிற பெட்டிக்கான சாவி உங்க கையில் இருக்கணும்!” என்று கூறினார்.

இதேபோல் தாமரையும் தன் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பதிவு செய்தவுடன், ஓட்டு போட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், “இதுவரை நான் பிக்பாஸில் இருந்ததே நான் ஜெயிச்சிருக்கேன் என்பதை தான் சொல்கிறது. விஜய் டிவிக்கு நன்றி.” என்று பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.