எனது மகளை விடுவிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதம்: யாழில் கைதான டிவனியா தாயார் தெரிவிப்பு!

யூரியூப் வீடியோக்கள் வெளியிடும் டிவனியாவை விடுதைல செய்யுமாறு தெரிவித்து தயார் மற்றும் உறவினரால் மகஜர் ஒன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனிடம் குடும்பத்தார் மற்றம் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து அந்த மகஜரை கையளித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிய யூரியூப் அலுவலகத்தில் வைத்து கடந்த வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி டிவனியா, விமல் என்பவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தீவிரவாத கொள்கைகளை பரப்பும் வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு பல தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகவும், அதற்கமைய ‘குறித்த யூடியூப் மற்றும் இணையத்தளம் என்பவற்றை நிர்வகித்த அலுவலகம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அலுவலகத்திலிருந்த 35 வயதுடைய பெண் ஒருவரும், 36 வயதுடைய ஆண் ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது 5 மடிக்கணனிகள் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

2011 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கைகளைப் பரப்புதல், அவ் அமைப்பின் சின்னத்தை வைத்திருத்தல், இலங்கையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய குற்றத்தின் கீழ் குறித்த கைது இடம்பெற்றதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.