நீதி வேண்டிப் போராடும் பேராயர் பாப்பரசருடன் இன்று நேரில் பேச்சு.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, திருத்தந்தை பரிசுத்த பாப்பரசருக்கு இதன்போது தெளிவுபடுத்தினார் என்று அறியமுடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.