உக்ரைன் நகரங்கள் மீது 950 ஏவுகணைகள் வீச்சு.

உக்ரைன் நகரங்கள் மீது ஒரு புறம் குண்டு வீச்சையும், மறுபுறம் ஏவுகணை வீச்சையும் ரஷிய படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் பலவற்றின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அங்கு இதுவரையில் 950 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன என்று அமெரிக்க ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உக்ரைனும், ரஷியாவும் தங்கள் போர் ஆற்றலில் 90 சதவீதத்தை இந்த போரில் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கீவின் அருகில்கூட இன்னும் ரஷிய படைகள் நெருங்கி வரவில்லை என்றும், இந்த படைகள் கீவ் நகருக்கு வட மேற்கில் சுமார் 15-20 கி.மீ. மற்றும் கிழக்கில் சுமார் 20-30 கி.மீ. தொலைவில் உள்ளதாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.