மலேசியாவில் காணாமற்போன 4 ஐரோப்பிய முக்குளிப்பாளர்களில் மேலும் இருவர் மீட்பு.

மலேசியாவில் அன்று காணாமற்போன 4 ஐரோப்பிய முக்குளிப்பாளர்களில் மேலும் இருவர் மீட்கப்பட்டனர், ஒருவரைக் காணவில்லை.

அவர்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

46 வயது பிரிட்டிஷ் ஆடவர் அட்ரியன் பீட்டர் செஸ்டர்ஸ் (Adrian Peter Chesters), 18 வயது பிரெஞ்சுப் பெண்மணி அலெக்சியா அலெக்சாண்ட்ரா மோலினா (Alexia Alexandra Molina) ஆகியோர் உள்ளூர் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுக் கடலோரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பிரிட்டிஷ் ஆடவரின் மகனை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவர்கள் மூவரும் பயிற்றுவிப்பாளர் ஒருவருடன் கடந்த புதன்கிழமை (6 ஏப்ரல்) மலேசியாவின் தெற்குத் தீவு ஒன்றுக்கு முக்குளிக்கச் சென்றபோது காணாமல் போயினர்.

கரையோரக் காவல்படை, காவல்துறை, மீன்பிடிப்பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய தேடல் குழு கடந்த புதன்கிழமை (6 ஏப்ரல்) தேடும்பணியைத் தொடங்கியது.

35 வயதான நார்வே பயிற்றுவிப்பாளர் கடந்த வியாழன் (7 ஏப்ரல்) அன்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.