நம்பிக்கையில்லா பிரேரணை, ஒட்டு மொத்த அரசாங்கத்துக்கு எதிரானதாகும்.

அரசுக்கு எதிரான “நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாமே இதை கொண்டு வருகிறோம்.

இந்நிலையில், இந்த, “நம்பிக்கையில்லா” பிரேரணை என்பது ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தனிநபர்களுக்கு எதிரானது என காட்டி தப்ப எவரும் முயல கூடாது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் நாம் கடுமையான பிரேணைகளை கொண்டு வருகிறோம்.

அவர்களையும் காட்டு காட்டென காட்டுவோம்.

ஆனால் முதலில் வரும் இது கோத்தபாயவின் முழு அரசாங்கத்துக்கும் எதிரானதாகும்.

அரசாங்கத்திலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் இதை ஆதரிக்க வேண்டும்.

முட்டாள் காரணங்களை சொல்லி எவரும் மக்களை முட்டாளாக்க முயல கூடாது.

Leave A Reply

Your email address will not be published.