திருமலையில் பாம்பு தீண்டி வயோதிபர் ஒருவர் மரணம்!

திருகோணமலை – திம்பிரிவெவ பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுனில் எனப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தொழில் நிமிர்த்தம் காரணமாக மாத்தளையில் இருந்து வருகை தந்து கடந்த ஆறு வருடங்களாக மஹதிவுல்வெவ பிரதேசத்தில் உள்ள வயல் காவல் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வயலுக்குள் நுழைந்த யானையை விரட்டுவதற்காகச் சென்றபோது அவரைப் பாம்பு தீண்டிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.