டக்ளஸ் உட்பட 10 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு.

பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று(20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பத்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ, திரான் அலஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனுஷா நாணயக்கார ஆகியோரே அமைச்சுப்பதவிகளை ஏற்கவுள்ளதாக தெரியவருகிறது.

சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா, விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர, கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்த, நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ச, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக திரன் அலஸ் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். எஞ்சிய ஏழு பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படுவார்கள் என தெரியவருகிறது.

அவர்கள் பிற்பகலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.