லாஃப்ஸ் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டிற்கு வருகை.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.

அதன்படி ,கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நாணய கடிதம் விடுவிக்கப்பட்டு மீண்டும் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதற்கமைய நாட்டை வந்தடையும் கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கப்பட்டதும், உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் பொது மக்களை கோரியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.